Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 17, 2016

    அரசு பொறியியல் கல்லூரிகளில் காலி இடம்!

    அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள பி.டெக்., இடங்களை சிறப்பு அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

    புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், ஆயிரத்து 350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் பல் மருத்துவ இடங்கள் உள்ளது. இதில் 117 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 

    முந்தைய கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் இடம் கிடைக்காமல் பொறியியல் படிப்பை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 6ம் தேதி நடைபெற்ற சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்று எம்.பி.பி.எஸ்.,இடங்களை தேர்வு செய்தனர்.

    இதனால் புதுச்சேரி பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள காமராஜர் கல்லூரியிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக உள்ளது.

    ஆகஸ்ட் 15ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று அகில இந்திய பொறியியல் கவுன்சிலும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.

    ஆனாலும், பல மாநிலங்கள் சிறப்பு அனுமதி பெற்று மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள்ள காலி இடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பி வருகிறது.

    அந்தவகையில் புதுச்சேரி அரசும் சிறப்பு அனுமதி பெற்று மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    No comments: