Pages

Saturday, October 22, 2016

தீபாவளிக்கு முன் சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை கொண்டாட, பொதுத்துறை ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பண்டிகை முன்பணம் என்ற பெயரில், 5,000 ரூபாய் தரப்படும். இந்த ஆண்டு, பெரும்பாலான மாவட்டங்களில், முன்பணத்திற்கான விண்ணப்பமே பெறப்படவில்லை.

இந்நிலையில், தீபாவளி, 29ல் வருகிறது. எனவே, இம்மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர், சாமி.சத்திய மூர்த்தி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.