கீழக்கரை, பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஜொலித்து வருகிறது. பெரியபட்டினத்தில் சேகு ஜலாலுதீன் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 77 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு ஒன்று முதல் 5வது வகுப்பு வரை 175 மாணவர்கள் படிக்கின்றனர்.
தலைமையாசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த பள்ளியை தரம் உயர்த்தவேண்டும், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து நிதி உதவி செய்து வருகின்றனர். இதன்மூலம் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ஒன்றிய தொடக்கப்பள்ளி ஜொலித்துவருகிறது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் கொன்னமுத்து கூறுகையில், கடந்த 2014ல் பள்ளிக்கு மராமத்து வேலைகள் செய்து, வர்ணம் பூசி அனைத்து வகுப்பறைகளுக்கும் மின் விளக்கு, விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தற்போது வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒருங்கிணைந்து முன்னாள் மாணவர் சங்கம் உருவாக்கி, இதன்மூலம் நிதி உதவி வழங்கிவருகின்றனர், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.