Pages

Monday, September 5, 2016

மாநில நல்லாசிரியர் விருதுக்கு சேலம் மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2015-16 ஆம் ஆண்டுக்கான உயரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, சேலம் மாவட்டத்தில் உள்ள 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்:

1. ந.பாஸ்கரன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இருசனாம்பட்டி, வீரபாண்டி. 

2. யா. ஜான் லூர்தாஸ், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கொண்டலாம்பட்டி, பனமரத்துப்பட்டி. 


3. பி.ஸ்ரீவித்யா, தலைமை ஆசிரியர், மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்மாப்பேட்டை.


4. கை.சண்முகவள்ளி,தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாமிநாயக்கன்பட்டி, ஓமலூர். 

5. மு.செல்வி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோணங்கியூர், கொங்கணாபுரம். 

6. க.மேகலா, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, எம்.பழக்காரனூர், மேச்சேரி.

7. இரா.ஜெயந்தி, தலைமை ஆசிரியர், நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை. 

8. பெ. சுசீந்திரன், தலைமை ஆசிரியர், நகரவை உயர்நிலைப் பள்ளி, புதுத்தெரு, கிச்சிப்பாளையம். 

9. பெ.சுமதி, தலைமை ஆசிரியர், அரசினர் மேல்நிலைப் பள்ளி, நட்டுவம்பாளையம், சேலம். 10. எ.மரியமெர்லின், தலைமை ஆசிரியர், அரசினர் (ம) மேல்நிலைப் பள்ளி, ஜலகண்டாபுரம்.

11. இரா.செல்லதுரை, முதல்வர், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம்.

12. சு.பியூலா ஞானபூஷனம், முதுகலை ஆசிரியர், குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம். 

13. க.கண்ணகி, முதுநிலை விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், உத்தமசோழபுரம். இந்த விருதுகள் சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.