Pages

Friday, August 19, 2016

பல்கலைகளுக்கு ’கிடுக்கிப்பிடி’; மத்திய அரசு உத்தரவு

கல்லுாரி மற்றும் பல்கலைகளின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 33 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, பல்கலைகளின் துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு, மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில், பெரும்பாலானவை, சீர்மிகு கல்லுாரி, தன்னாட்சி அந்தஸ்து என, பல வகைகளில், மத்திய அரசிடம், பல கோடி ரூபாய் மானியம் பெறுகின்றன. 


ஆனால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், துணை வேந்தர் நியமனம், பேராசிரியர் நியமனம், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்துவதிலும் முறைகேடுகள் உள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், துணைவேந்தர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கும், தனித்தனியே, 10 முதல், 33 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுப்பியுள்ளது. ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்; மத்திய, மாநில அரசிடம் பெறும் நிதி எவ்வளவு போன்ற கேள்விகள் அதில் உள்ளன.

மேலும், நியமனங்கள் முறையாக நடந்ததா; நியமனத்திற்கான கல்வித் தகுதி எவ்வளவு என்பன போன்ற, பல, கிடுக்கிப்பிடி விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளதால், துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.