Pages

Wednesday, August 24, 2016

தமிழை எளிதில் கற்க ’வீடியோ’ பாடம்; மாணவர்கள் மகிழ்ச்சி!

தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக் கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள, தமிழ் புத்தக பாடல்களின் வீடியோவை, இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.


செயல்வழி கற்றல், கணினி வழி கற்றல் போன்ற பல திட்டங்களில், மொழியை எளிதாக கற்று கொடுக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக,10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள்,தங்களின் அறிவியல் பாடபடங்களை, நான்கு பரிமாணத்தில் பார்த்து படிக்கும், புதிய, சிடி கடந்த மாதம் வெளியானது. இந்த வீடியோ படம், தமிழ்நாடு கல்வித்துறை என்ற பெயரில், யூ- டியூப்பில் இணைக்கப்பட்டு, பல ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கூகுள் பிளே ஸ்டோர் ஆப் மூலம், புதிய அப்ளிகேஷன் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, தொடக்கக் கல்வியில், தாய்மொழியை எளிதாக படிக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, புத்தகத்தில் உள்ள, 40 பாடல்கள், வீடியோவாக மாணவர்களின் நடனத் துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள், யூ-டியூப்பில், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்ற பிரிவில், தாயெனப்படுவது தமிழே என்ற பெயரில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஒரு வாரத்தில், அதை, 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 35 ஆயிரம் தொடக்க பள்ளி களுக்கு, இலவசமாக இந்த, சிடி அனுப்பப்பட உள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.