Pages

Saturday, August 6, 2016

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள், 1,000 பேருக்கு, சிறப்பு தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இந்த பயிற்சிக்கு, 30 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி துவங்கியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.