Pages

Tuesday, August 23, 2016

பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் இன்று, விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது,  தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும்.

பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், மழைக் காலங்களில் எவ்வித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வர வசதியாக ரெயின்கோட் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.