ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில், நேற்று நடந்த ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், ஆறு ஆசிரியர்கள் பதவி உயர்வை புறக்கணித்து, வியப்பை ஏற்படுத்தினர்.
ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில், உயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள் கவுன்சிலிங் நேற்று நடந்தது. மொத்தம், 24 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில், 18 ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றுச் சென்றனர்.
ஆறு ஆசிரியர்கள் மட்டும், எங்களுக்கு பதவி உயர்வு வேண்டாம். தற்போது என்ன பணி செய்கிறோமோ அந்த பணியையே தொடர்ந்து செய்கிறோம் என, தெரிவித்தனர். அவர்களை மற்ற ஆசிரியர்கள் வினோதமாகப் பார்த்து, என்ன காரணம் என, விசாரித்துக் கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.