ராணிப்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் ஆசிரியரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் எஸ்.கிருபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.விஷ்ணுராம், மாவட்ட பொருளாளர் பி.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எல்.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.