Pages

Friday, July 8, 2016

பெட்டிக்கடைகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிஒன்றிய பள்ளிகள், அரசு தொடக்க பள்ளிகள், அரசு உயர்நிலை பள்ளிகள், கள்ளர், பழங்குடியினர் நல பள்ளிகள், உருது பள்ளிகள் ஆகியவற்றின், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும்உத்தரவு  பிறப்பித்துள்ளனர்.


*இதன்படி, 'பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள பெட்டி கடைகள், 'ஸ்டேஷனரி' கடைகளில் விற்கப்படும் சாக் லேட் போன்ற இனிப்பு பொருட்களை கண் காணிக்க வேண்டும்

*சந்தேகப்படும் படியாக, குறிப்பிட்ட கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தாலோ, 

*மாணவர்கள் குறிப்பிட்ட தின்பண்டத்தை விரும்பி சாப்பிட்டாலோ* உள்ளூர் சுகாதார துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த ப்பட்டுள்ளனர்.

*புகார் எண் :
* சந்தேகப்படும்படியாக சாக்லேட், உணவுப்பொருட்கள் விற்பனை நடந்தால், *உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவிற்கு, 94440 42322 எண்ணிலும்; இந்திய மருத்துவத் துறையின், மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணையத்திற்கு, 044 - 2622 3653* எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.