'தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து ஜூன், 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் கோடையால், இந்த தேதியை தள்ளி வைக்க, பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள், சென்னையில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அனைத்து பள்ளிகளும் தங்கள் மாணவர்களுக்கு தேவையான நோட்டு - புத்தகங்கள் மற்றும் சீருடைகளை முன்கூட்டியே, மாவட்ட அலுவலகங்களில் இருந்து வாங்கி வைத்து கொள்ள வேண்டும். பள்ளி திறந்ததும் முதல் நாளே நோட்டு - புத்தகம், சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கி, அறிக்கை அனுப்ப வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.