மதுரையில் சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்.,24ல் நடந்தது.
இதில் பல ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. இவர்கள் தங்களது தேர்தல் அதிகாரிகளிடம் அதற்கான தகுந்த விளக்கத்தை மே 3க்குள் (நாளை) அளிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 136ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.