பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 17ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 19ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், இன்று முதல் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.