Pages

Thursday, April 28, 2016

தேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை

"தேர்தல் பணியில், எந்த "கிரேடு' அடிப்படையில் நியமிக்கப்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என, சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி, வாழ்வியல் திறன் கற்றுத்தருவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள், மாணவர்களுக்கு மூன்று மணி நேரம் பாடம் கற்றுத்தருவர். மாதம், 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.


வழக்கமாக, தேர்தல் வேலைகளில் அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். இம்முறை, சிறப்பு ஆசிரியர்கள் சிலருக்கும், தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, தேர்தல் பணி நியமன உத்தரவு வழங்கும்போது, சிறப்பு ஆசிரியர் என குறிப் பிடவில்லை. இதனால், தங்களுக்கு எந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்; அரசு தங்களை எந்த "கிரேடில்' வைத்துள்ளது என தெரியாமல், குழப்பம் அடைந்துள்ளனர்.

கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
பணி உத்தரவு வழங்கும்போது, ஓவிய ஆசிரியர் என, குறிப்பிடுகின்றனர். தேர்தல் பணியில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர் என்ற முறையில் இணைத்துள்ளனரா? அல்லது அரசு பணியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.

எங்களில் பலரும், மத்திய அரசின் நிதி, 65 சதவீதம்; மாநில அரசின் நிதி, 45 சதவீதம் வாயிலாக, சம்பளம் பெறுகிறோம். பணி உத்தரவுக்கான விண்ணப் பம் வழங்கும்போது, மாநில அரசு ஊழியரா, மத்திய அரசு ஊழியரா என கேள்வி இடம் பெறவில்லை. எனவே, தேர்தல் பணிக்கு, நாங்கள், எந்த "கிரேடு' அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.