Pages

Friday, April 8, 2016

வாட்ஸ் ஆப்பில் பாதுகாப்பாக செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகம்

வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் செய்திகளை பெருநாரை தவிர வேறு யாரும் பார்க்கமுடியாதபடி வசதி செய்யப்பட்டுள்ளது. நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது.


நாம் அனுப்பும் மெசேஜ், 'பப்ளிக் கீ' மூலமாக என்க்ரிப்ட் (குறியீடுகள் மூலம் மறைக்கப்பட்டு) செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப் சர்வரை சென்றடைகிறது. வாட்ஸ் ஆப் சர்வரில் நம் நண்பரின் ப்ரைவேட் கீ இல்லாததால், நாம் அனுப்பும் மெசேஜினை வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் பார்க்க முடியாது. வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்து, நம் நண்பர்களிடம் சென்றடையும் மெசேஜ், நம் நண்பரிடம் இருக்கும் 'ப்ரைவேட் கீ' யால் டீக்ரிப்ட் செய்யப்படுகிறது. இதனால் நம் நண்பர்களால் அந்த மெசேஜினை பார்க்க முடிகிறது. எழுத்து, புகைப்படம், வீடியோ என எதையுமே அனுப்புனர் மற்றும் பெறுநரைத் தவிர, வேறு யாராலும் பார்க்க முடியாது. 

அரசாங்கத்தால் கூட. இந்த தொழில்நுட்பத்தால், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் மெசேஜ்களை கண்டு பிடிக்க முடியாது என சில அரசு அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால் வாட்ஸ் ஆப், தனது பயனர்களின் தனிப்பட்ட உரிமையினை பாதுகாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.