Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 18, 2016

    10க்கு புதிய நிபந்தனை:மொழி பாடங்களில் 'சென்டம்' கஷ்டம்

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 13ல் முடிந்தது; 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும், 40க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இந்த ஆண்டு முதல், விடைத்தாள் திருத்தத்தில் மொழி பாடங்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
    அதாவது, தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பாடங்களுக்கு, விடைத்தாள் திருத்தத்தின் போது, 'சென்டம்' மதிப்பெண் வந்தால், அதை, இரண்டாவது மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மொழி பாட விடைத்தாளில், 100 மதிப்பெண் வந்தால், அந்த மாணவரின் விடைத்தாளை, மதிப்பெண் கணக்கீட்டாளர், முதன்மை திருத்துனர் ஆகியோர் சரிபார்க்க வேண்டும். பின், அந்த விடைத்தாளை முகாம் அதிகாரியிடம் காட்டி, அதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும்.பின், தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுப்படி, மற்றொரு முதன்மை மதிப்பீட்டாளர் மற்றும் உதவி மதிப்பீட்டாளர் மூலம், மறு மதிப்பீடு மற்றும் ஆய்வு செய்ய வேண்டும். இதில், அந்த மதிப்பெண் மாறாவிட்டால் மட்டுமே, 'சென்டம்' வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறும்போது, 'இதுபோன்ற நிபந்தனைகள் மூலம், மாணவர்களுக்கு மொழி பாடத்தில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. அதேநேரம், சரியான விடைத்தாளுக்கு சரியான மதிப்பெண் தருவது தேவையான நடவடிக்கை' என்றனர்

    No comments: