Pages

Thursday, April 7, 2016

10ம் வகுப்பு விடைத்தாள் 16 முதல் திருத்தும் பணி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, 16ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், 81 மையங்களில் தனித்தேர்வர் உட்பட, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், இத்தேர்வை எழுதி வருகின்றனர். 


நாளை, அறிவியல்; 11ல் சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது. 13ல், விருப்ப பாடத்துடன், பொதுத்தேர்வு நிறைவடையும். திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில், விடைத்தாள் திருத்தும் பணி, 16ல் துவங்குகிறது; 16 மற்றும், 17ல் முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பயிற்சி வழங்கப்படும். 18 முதல், மொழித்தாள் பாட விடைத்தாள் திருத்தப்படும்; 1,500 உதவி தேர்வர்கள், இப்பணியில் ஈடுபடுவர்.

இம்மாதம், 1ல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி, 25க்குள் முடியும் என, ஏற்கனவே கூறப்பட்டது; 15 நாட்கள் தாமதமாக துவங்குவதால், பணி நிறைவடைய, கூடுதல் நாட்கள் தேவைப்படும். மே இரண்டாவது வாரத்தில், இப்பணி நிறைவடைய வாய்ப்புள்ளது. மே, 20க்கு பின், தேர்வு முடிவு வெளியாகலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.