Pages

Monday, March 28, 2016

ஐ.டி.பி.ஐ., வங்கி ஊழியர்கள் இன்று முதல் 4 நாள் 'ஸ்டிரைக்'

தனியார் முதலீட்டை அதிகரிக்கும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ஐ.டி.பி.ஐ., வங்கியின் ஊழியர் சங்கங்கள், இன்று முதல், நான்கு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஐ.டி.பி.ஐ., வங்கியில் உள்ள, மத்திய அரசின் பங்கை, 80 சதவீதத்திலிருந்து, 50 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க உள்ளதாக, சமீபத்தில் பார்லிமென்டில் அறிவித்தார். 

அரசின் இந்த முடிவுக்கு, ஐ.டி.பி.ஐ., வங்கியின் ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.சங்கங்களின் பிரதிநிதிகளுடன், வங்கியின் மூத்த அதிகாரிகள் குழு நடத்திய, பல சுற்று பேச்சுகள் தோல்வியடைந்தன. அதைத் தொடர்ந்து, ஐ.டி.பி.ஐ., வங்கியின் இரண்டு சங்கங்கள், இன்று முதல் நான்கு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.