Pages

Saturday, March 26, 2016

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு

 தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 15 முதல்
துவங்குகிறது. 'தமிழ் தேர்வில் இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களின் தேர்வுகள், ஏப்., 11ல் முடிகின்றன.

விருப்ப மொழி பாடத்துக்கு, ஏப்., 13ல் தேர்வு நடக்க உள்ளது. இதையடுத்து, ஏப்., 15 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்குகின்றன. அனைத்து தேர்வுகளுக்கும், ஒரே நேரத்தில் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், தமிழ் தேர்வில் இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.