Pages

Monday, February 15, 2016

ரேஷன் கடைகள் இன்று திறந்திருக்கும்

'ரேஷன் கடைகள், இன்று, வழக்கம் போல் செயல்படும்' என, ரேஷன் கடை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் வருவாய் துறை, வணிக வரி, சத்துணவு துறை உள்ளிட்ட பல துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ரேஷன் ஊழியர்கள், இன்று முதல், வேலை நிறுத்தம் செய்ய போவதாக தகவல் வெளியானது. ஆனால், இன்று வழக்கம் போல், கடைகளை திறக்க இருப்பதாக ரேஷன் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.


சமீப காலமாக, ரேஷன் கடைகளுக்கு, முழு அளவில் பொருட்கள் வழங்காததால், அனைத்து மக்களுக்கும் வழங்க முடியவில்லை. தேர்தலை முன்னிட்டு, தற்போது தான் ஓரளவிற்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இன்று, வழக்கம் போல், ரேஷன் கடைகள் செயல்படும். ராஜேந்திரன்தமிழக அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க தலைவர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.