Pages

Monday, February 1, 2016

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் : ஜி.கே.வாசன்

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் குறித்து இன்று கருத்து தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் கூறியதாவது:  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி 3 நாளாக போராடி வருகின்றனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.
எனவே மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தனது அறிக்கையில் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.