Pages

Monday, February 1, 2016

காற்றில் பறக்கும் உத்தரவு

அரசு ஊழியர்கள் தேர்வில், ஊழலை ஒழிக்கும் பொருட்டு, மூன்று மற்றும் நான்காவது நிலை ஊழியர்கள் தேர்வில், நேர்காணலை ரத்து செய்யும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், பிரதமர், கோரிக்கை விடுத்திருந்தார். இதையேற்று, உ.பி., தமிழகம், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள் இதற்கான முயற்சியை துவங்கியுள்ளன. ஆனால், பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத், இந்த உத்தரவை கண்டுகொள்ளவில்லை.
அரசின் கடைநிலை ஊழியர்கள் தேர்வுக்கான நேர்காணலை ரத்து செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, மத்திய அரசு தகவல் கேட்டது. 18 மாநிலங்கள், இது குறித்த உறுதியான பதிலை அளித்துள்ளன. பா.ஜ., ஆளும் மாநிலங்களான குஜராத் மட்டுமின்றி, மத்திய பிரதேசமும், இந்த உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.