மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 6–வது ஊதியக்குழுவில் உள்ள குறைகளை களைய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில் 3 நாட்கள் தொடர்மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 30–ந்தேதி முதல் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை சார்பில் போராட்டம் நடைபெற்றது. முதல் நாள் போராட்டத்தில் சுமார் 700–க்கும் மேற்பட்டோரும், 2–வது நாளான நேற்று 500–பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் 3–வது நாளான இன்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆசிரிய–ஆசிரியைகள் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட சுமார் 1,200 பேரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.