Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 14, 2016

    திருச்சி ஜாக்டோ கூட்ட முடிவுகள்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொருளாளர் திரு தே.அலெக்சாண்டர் அறிக்கை

    10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்குட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உயர்மட்டக்குழு உருப்பினரும் மாநில பொருளாளருமான திரு தே.அலெக்சாண்டர் அவர்கள் கலந்துகொண்டார் .உடன் மாநில துணைப்பொதுசெயலர் திரு சு மா,பாலு மற்றும் திருச்சி மாவட்டசெயலர் திரு நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து திரு அலெக்சாண்டர் அவர்கள் தனது அறிக்கையில்
    1.திட்டமிட்டபடி மாநிலம் முழுவதும் ஜனவரி-30.31, மற்றும் பிப்ரவரி-1 ஆகிய தேதிகளில் ஜாக்டோவின் 15 அம்சக்கொரிக்கையை வலியுறுத்தி மாவட்டத்தலைநகரில் மறியல் போராட்டம் நடத்துவது 
    2.அதற்கான மாவட்டத்தலைநகரில் ஜனவரி-23 அல்லது 24 ஆகிய நாட்களில் ஆயத்தக்குட்டங்களை மாவட்ட ஜாக்டோ அமைப்பு நடத்துவது என்றும் அதில் மாவட்ட ,வட்டார,வட்ட அளவிலான ஜாக்டோ இணைப்புசங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மறியல் போராட்டம் வெற்றிபெறவும் ஆயத்தப்பணிகள் ,ஆசிரியர் சந்திப்பு இயக்கம் ஆகியன குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஜாக்டோ  உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பர்.மற்ரும் மாநில அமைப்பின் வழிகாட்டுதல்படி அமையப்பெற்ற துண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கப்படும் 
    3.பள்ளிகள் தோறும் சென்று  மறியல் போராட்டத்தில் திரளான ஆசிரியர்களை பங்கேற்கும் வகையில் ஆசிரியர் சந்திப்பு இயக்கம்  ஜனவரி-26,27,28 ஆகிய தேதிகளில் நடத்தப்படவேண்டும். 4.அப்போது மறியல் போராட்டத்தில் பங்கேற்க ஏதுவாக ஜாக்டோ அமைப்பில் பெயரில் ஒப்புதல் படிவம் பெறப்படல் வேண்டும் 
    5. ஜனவர்30அன்று நடத்தப்படும் முதல் மறியல் நாளில் மிகப்பெரும்பான்மையான் ஆசிரியர்களை பங்கேற்க செய்ய வேண்டும் 
    6. ஜனவரி -30 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப்பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான தலைவர்கள்  ஏற்பார்கள் 7. அடுத்த நாளான ஜனவரி -31 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப்பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான பொருளாளர்கள்  ஏற்பார்கள் 
    7. இறுதி நாளான பிப்ரவரி-1 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப்பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான செயலாளர்கள்  ஏற்பார்கள். மறியல் விளக்க உரை மூன்று நாட்களும் மாநில ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ,மற்றும் மாவட்ட ஜாக்டோ அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்பர்.           ஆசிரியர்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் திட்டமிட்டு பணியாற்றவேண்டும் என ஜாக்டோ மாவட்ட,வட்டார பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    No comments: