Pages

Thursday, January 28, 2016

சேலம் மாவட்டத்தில் 7.2.2016 அன்று பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மாபெரும் உண்ணா நிலை போராட்டம்.

கணினிக் கல்வியை ஆரம்ப கல்வி முதல் கட்டாயப் பாடமாக அரசு பள்ளியில்
கொண்டுவர-கோரி.
ஞாயிறு காலை
9.36 லிருந்து மாலை 5மணி வரை.
சேலம் மாவட்டம்.
கலெக்டர் அலுவலகம் அருகில் .
உண்ணாநிலை போராட்டம்.

அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.
அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக் கப்பட்ட, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் அல்லவா?
அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினிப் பயிற்சி அவசியம்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது; அதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினிப் பயிற்சி போன்ற மிகவும் தேவையான பயிற்சியை அரசுப் பள்ளிகள் புறக்கணிப்படுகிறது
தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார் கள் என்றால், அதற்குக் காரணம் கணினிப் பயிற்சி போன்ற கல்விக்கு அப்பள்ளிகளில் முக்கியத்துவம் தருகின்றன் ஆனால்
அரசு பள்ளியில் கணினி கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன
இதனை வலியுருத்தி
7.2.2016 சேலம் மாவட்டத்தில்
உண்ணா நிலை போராட்டம் நடைபெறுகிறது...
தமிழ்க அரசு பள்ளியில் கணினிக் கல்வியை கொண்டுவர கோரியும் .நம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை வெற்றி பெறவும் அனைவரும் வருக சேலம் மாநகர் நோக்கி.....
வெ.குமரேசன்
மாநில செயலாளர்
9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.