Pages

Saturday, January 30, 2016

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து ஜாக்டோ போராட்டம் தொடக்கம் பிப்.1 பள்ளிகள் இயங்காது

ஜாக்டோ அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனமாக இருக்கும் தமிழக அரசை கண்டித்து, இன்று தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி வரை தொடர் மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ அமைப்பில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், கடந்த நான்கரை ஆண்டுகளாக  இடைநிலை ஆசிரியர் உட்பட அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் படிகள் உட்பட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 


ேமலும், தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும், தொடக்கப் பள்ளி முதல் மேனிலைப் பள்ளி வரை தமிழ்மொழி வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு அதை கண்டு கொள்ளவில்லை, நிறைவேற்றவில்லை. இதையடுத்து,  ஜாக்டோ அமைப்பு ஏற்கனவே அறிவித்தபடி, 30, 31, பிப்ரவரி 1ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டத்தை இன்று தொடங்குகிறது.  இதற்காக 27, 28, 29ம் தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு இயக்கத்தை ஆசிரியர் சங்கங்கள் நடத்தின. 

அதில் ஒவ்வொரு ஒன்றிய வாரியாக போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ளபடி பிப்ரவரி 1ம் தேதி வரை   தொடர் மறியல் போராட்டத்தில் 2 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடக்கிறது. மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு நடக்கிறது. இதை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் இயங்காது என்று ஜாக்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.