Pages

Thursday, December 3, 2015

வடமேற்கு நோக்கி நகரும் தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையும், இலங்கைக்கு அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகியிருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் மிக கன மழை பெய்து, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் வடமேற்காக நோக்கி நகர்வால், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.