Pages

Monday, November 2, 2015

பள்ளி மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள்

கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள் நடந்தது. 

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை எழுதுதல் போட்டி, வினாடி-வினா போட்டி, குரலிசைப் போட்டி, ஓவியப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் போட்டி, பரத நாட்டியம், கிராமிய நடனம் என, 9 போட்டிகள் நடந்தது. ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலும், ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும், மேல்நிலை என, மூன்று நிலைகளில் நடந்த இப்போட்டியில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் அகமதுபாஷா துவக்கி வைத்தார். 

ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் தலைமையில், 3 நடுவர்கள் நியமிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த, 9 மாணவ, மாணவிகள் வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.