Pages

Wednesday, October 21, 2015

குரூப் 2A தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை 12.10.2015 அன்று வெளியிட்டிருந்தது.

மேற்படி ஒருங்கிணைந்த சார்நிலைப் பணியில், வனத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை மற்றும் நிலஅளவை துறைகளில் உள்ள உதவியாளர் பதவி, தலைமைச்செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள நேர்முக உதவியாளர் ஆகியவற்றில் 84 கூடுதல் பதவிகள் உள்ளடக்கியதுணை அறிவிக்கையினை இன்று (20.10.2015) வெளியிட்டுள்ளது. அவ்வறிவிக்கையில் வெளியிடப்பட்ட தேர்வு தேதியும் மாற்றப்பட்டு 24.01.2016 அன்று இத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.