Pages

Sunday, October 11, 2015

டிசம்பர் 27-ல் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு

தமிழக அரசு துறைகளில் உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகளை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வினை பட்டதாரிகள் எழுதலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். ஏதேனும் ஒரு துறையில் அரசு பணி உறுதி. காரணம், நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது.


இந்த நிலையில், வணிகவரித்துறை, போக்குவரத்துத்துறை, பத்திரப் பதிவுத்துறை உள்ளிட்ட துறைகளில் 1,862 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிசம்பர் 27-ம் தேதி குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு 12-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.