Pages

Saturday, October 17, 2015

துண்டிக்கப்படும் இணைப்புக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் : டிராய் அதிரடி உத்தரவு


வாடிக்கையாளர்கள் செல்போனில் பேசும்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு (கால் டிராப்) விடுகிறது. இப்படி துண்டிக்கப்படும் இணைப்புக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் வசூலித்து வந்தன. இது தொடர்பாக டிராய்க்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இந்நிலையில் டிராய், நேற்று வெளியிட் ட உத்தரவில் கூறியிருப்பதாவது;
துண்டிக்கப்படும் இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். 


நாள் ஒன்றுக்கு 3 இணைப்புக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். இணைப்பு துண்டிக்கப்பட்ட 4 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் வாடிக்கையாளர் கணக்கில் செலுத்திய விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதுபோல் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாத பில்லில் இதுகுறித்து தெளிவாக தெரிவிக்க வேண்டும். இதை வரும் ஜனவரி 1ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.