Pages

Wednesday, September 2, 2015

ஒரே பதிவெண்; ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் தகவல்


மேல்நிலை / இடைநிலை தேர்வெழுதும் தேர்வர்களுக்கு ஒவ்வொரு பருவ தேர்வின் போதும் தனித்தனி பதிவெண் வழங்கும் முறைக்கு பதிலாக ஒரு தேர்வருக்கு ஒரே பதிவெண் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.


பள்ளி கல்வித்துறை மீதான மானிய கோரிக்கையின் போது பேசிய அவர், மாணவர்களுக்கான புதிய கற்றல் இணையதளம் அமைக்கப்படும் என்றார். மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.