Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 14, 2015

    சேமிப்பும் சேவையும் திட்ட தொடக்க விழா

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சேமிப்பும் சேவையும் என்கிற திட்டம் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய தினத்தை முன்னிட்டு சேமிப்பும் சேவையும் சுவாமிஜியின் பெயரால் என்கிற திட்டதை தேவகோட்டை தபால் அலுவலக தலைமை அதிகாரி ராமசந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
    சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும்,விவேகானந்தர் கூறியுள்ள பொன்மொழிகள் குறித்தும்,அதனை மாணவர்கள் கடைபிடிப்பதற்க்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.இத்திட்டத்தின்படி மொத்தம் 81 நாட்கள் உண்டியல் மூலம் பணம் சேமித்து அதனை பள்ளியின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் ,மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கம் ஏற்படுத்தவும் வழிவகை செய்கிறது.1ம் வகுப்பு திவ்யஸ்ரீ ,3ம் வகுப்பு கிஷோர் குமார் , ஜனஸ்ரீ ,கீர்த்தியா,4ம் வகுப்பு தனுதர்ஷினி,6ம் வகுப்பு சக்தி,7ம் வகுப்பு சாய் புவன்,8ம் வகுப்பு முனீஸ்வரன் ஆகியோர் விவேகானந்தர் வேடம் அணிந்து அவர் குறித்து பேசினார்கள்.மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வழிகாட்டுதலின்படி இவ்விழா நடைபெற்றது.
    பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சேமிப்பும் சேவையும் என்கிற திட்டம் துவக்க விழா தேவகோட்டை அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    No comments: