Pages

Thursday, August 27, 2015

CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு அரசாணை பற்றிய ஓர் பார்வை:

CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த  ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே. அதனை அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் வரிகள் மூலம் அறியலாம்.

"தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து ஏற்று, அரசாணை (நிலை) எண்:29, பள்ளிக்கல்வி, நாள்: 12.2.2008-ல் கீழ்வருமாறு திருத்தம் செய்து வெளியிடுகிறது, இவ்வாறு குறிப்பிட்டு திருத்தம் என்று தலைப்பிட்டு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CRC யில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு அனுபவிக்க அரசாணை 62 நாள்: 13.3.15 வெளியிடப்பட்ட பின்னர் கலந்து கொண்ட CRC நாட்களுக்கு மட்டுமே ஈடுசெய்யும் விடுப்பு எடுக்க வேண்டுமெனவும், அதற்கு முன்னர் கலந்து கொண்ட CRC நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்திருக்கக் கூடாதென்று சில ஒன்றியங்களில் கூறப்படுவதாக அறிய வருவதால் இவ்விளக்கத்தினை ஆசிரியர்கள் முன் வைத்துள்ளோம். இதனடிப்படையில் உரிய கோரிக்கை மனு ஒன்றை TATA பொது செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் வரும் செப்டம்பர் 4 அன்று தொடக்க கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து அளிக்க உள்ளார் என்பதையும் தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.