அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் அவரவர் பயிலும் கல்வி நிலையங்களில் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆக. 15 வரை காலக்கெடுநீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரிடம் உதவித்தொகை வேண்டுவோரின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவும் ஆக. 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு மற்றும் கல்வி நிலையங்கள் அவ்விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய காலக்கெடுவும் ஆக. 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தவறாது இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.