தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் உடற்பயிற்சி பரிசோதனைகள் திங்கள்கிழமை (ஆக.3) தொடங்குகின்றன.தமிழகத்தில் அண்மையில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சான்று சரிபார்ப்பு மற்றும் உடற்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் 512 பேர் மற்றும் 200 பெண்களும் அடங்குவர்.
மேலும் 200 பேர் காவல்துறையில் தற்போது பணிபுரிந்து தேர்வெழுதியவர்கள் என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.