Pages

Friday, July 17, 2015

இணைய சமநிலை அறிக்கை வெளியானது!

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைத்த குழு, இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை, தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இதில் இணைய சமநிலையை காக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இணைய சமநிலை: இன்டர்நெட் பயன்பாட்டில் எந்தவொரு வெப்சைட்டுக்கும், அப்ளிகேஷனுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல், அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவதே இணைய சமநிலை.


எதிர்ப்பு: வாட்ஸ்அப், பேஸ்புக், ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் முறையிட்டன. இதனால் அக்குறிப்பிட்ட பக்கங்களை பார்க்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டியது வரும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இணைய ஆர்வலர்கள், போராட்டத்தில் குதித்தனர்.

6 பேர் கொண்ட குழு: இதனையடுத்து, மத்திய தொலைதொடர்புத்துறை ஆலோசகர் ஏ.கே.பார்கவா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. பல்வேறு ஆய்வுக்குப்பின், அக்குழு தனது இறுதி அறிக்கையை, தொலைதொடர்புத்துறை வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. அதில் இணைய சமநிலை கொள்கையை கடைபிடிக்க உறுதியளித்துள்ளது.

சாராம்சம்: குறைந்த விலையில் தரமான பிராட்பேன்ட் வசதி கிடைக்க வேண்டும்; இணைய சமநிலைக்கு எதிரான ஆர்.ஜி.ஓ., திட்டத்தை யாரும் ஊக்குவிக்கக் கூடாது; "ஏர்டெல் ஜீரோ' திட்டம் டிராய் ஒப்புதலுடன் நடத்தப்பட வேண்டும்; ஸ்கைப், வாட்ஸ்அப் போன்ற இன்டர்நெட் வழி டெலிபோன் அழைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; இவை தேசபாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்;

செல்போன் அழைப்பு கட்டணங்களும், இன்டர்நெட் வழி அழைப்பு கட்டணங்களும், ஒரே சீராக இருக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் போன்ற முக்கிய சாராம்சங்கள் இதில் அடங்கியுள்ளன. மேலும் இந்த பரிந்துரைகள் மீது ஆக.,15 வரை கருத்து தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதரவு: இணைய சமநிலை தொடர்பான இந்திய தொலை தொடர்புத்துறையின் பரிந்துரைகள், இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எனக்கூறிய பேஸ்புக் நிறுவனம், தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.