Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 14, 2015

    ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டத்தால் அவினாசிலிங்கம் பல்கலையில் பரபரப்பு; காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

    கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகம் மத்திய அரசின், பல்கலைகழக மானியக்குழு நிதியுதவி பெறும் நிலையில், ஒப்பந்தத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறையில் ஜூன் 30ம் தேதியுடன் (எம்ஓயு) புதுப்பிக்க வேண்டும்.ஆனால் பல்கலைகழக அறக்கட்டளை நிர்வாகம் ஒப்பந்தத்தை புதுப்பிக்காதால், பல்கலைகழக பேராசிரியையைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களாக பல்கலைகழகம் இழுத்து மூடப்பட்டன. நேற்று பல்கலைகழகம் திறக்கப்பட்டது. 

    ஆனால், ஒப்பந்தம் புதுப்பிப்பது தொடர்பாக வேந்தர் சரியான பதில் அளிக்காததால், காலை முதல் 200 க்கும் மேற்பட்ட பேராசிரியையைகள் வகுப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர். இரவு விடிய, விடிய பல்கலைகழகத்தின் ஒன்றாம் எண் நுழைவு வாயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலை நிர்வாகத்தினர் கேட்டை இழுத்து மூட முயன்ற போது, அதை தடுத்து கோஷம் எழுப்பினர். கோவை வடக்கு தாசில்தார் ரவி, பல்கலைகழகத்திற்கு வந்து பேச்சுவார்தை நடத்தினார். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. இரவு 12:00 மணிக்கு பிறகும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், பல்கலை கழக நிர்வாகம் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவித்தது.

    No comments: