Pages

Friday, June 12, 2015

பார்வையற்ற மாணவியருக்கு 'அட்மிஷன்' : அரசு உத்தரவு

பெற்றோரின் கோரிக்கையை ஏற்று பார்வையற்ற ஏழு மாணவியரை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இருபாலர் பயிலும் இப்பள்ளியில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற ஏழு மாணவியரை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க மறுத்து விட்டனர்.
அரசு உத்தரவை காரணம் காட்டி பள்ளி தலைமை ஆசிரியர் பார்வையற்ற மாணவியரை திருப்பி அனுப்பினார். இதனால் அதிருப்தியடைந்த மாணவியரின் பெற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி சங்க நிர்வாகிகள் முதல்வர் மற்றும் மாற்றுத் திறனாளி நலத்துறையிடம் முறையிட்டனர்.இதையடுத்து அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் பார்வையற்ற ஏழு மாணவியரையும் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.