ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, குறைந்த மதிப்பெண் பெறும், 'டல்' மாணவர்களை கட்டாய வெளியேற்றம் செய்யும் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்புகளான ஏழு, எட்டு, 10 ஆகிய வகுப்புகளில் சேர, மாணவ, மாணவியர் வந்த வண்ணம் உள்ளனர்.
பல பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்காததால், மாணவர்களின் பெற்றோர், கல்வித் துறை அதிகாரிகளின் சிபாரிசுக்காக, கல்வி அலுவலகங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் விசாரித்த போது, தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், குறைந்த மதிப்பெண் வாங்கும், 'டல்' மாணவர்களை, அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு கட்டாய வெளியேற்றம் செய்வதாக, பெற்றோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இப்படி வெளியேற்றப்படும் மாணவர்களை, மற்ற தனியார் பள்ளிகளும் சேர்த்துக் கொள்ளாததால், வேறு வழியின்றி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர வருவதாக தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களை கட்டாய வெளியேற்றம் செய்யும் மெட்ரிக் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து, அதன் அடிப்படையில், பள்ளிக்கான என்.ஓ.சி., எனப்படும் தடையில்லா சான்றை ரத்து செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்பில் சேரும்
மாணவர்கள், எந்த தனியார் பள்ளிகளில் இருந்து வருகின்றனர் என்பதை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.