Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 15, 2015

    பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும்

    ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார்.அவர் கூறியதாவது: 


    தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தேர்வு வாரிய தர எண் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக அறிவியல் பாடம் பயின்றவர்களையே நியமிக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் இல்லாத நிலையில், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமனம் நடந்தது. இவர்களுக்கு தொகுப்பூதிய பணிக்காலம் பணிமுறிவு காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை பணிக்காலமாக அரசு அறிவிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், என்றார். மாநில பொருளாளர் செல்லையா, துணைப் பொதுச் செயலாளர் முகமது அயூப் உடனிருந்தனர்

    No comments: