தமிழகத்தில் வேளாண்மைப் படிப்புகளில் சேர 29,825 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, ஜூன் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியவர்கள் அதில் உள்ள தவறுகளைச் சரி செய்து கொள்ள செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மாலை வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதையடுத்து, ஜூன் 20-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
ஜூன் 27-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
பொதுப் பிரிவினருக்கான முதல் கட்டக் கலந்தாய்வு ஜூன் 29 முதல், ஜூலை 11 வரையும், 2-ஆம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 15 முதல் 17-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.