Pages

Friday, June 19, 2015

தினந்தோறும் பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவு

விழுப்புரத்தில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது.சர்வதேச யோகா தினத்தை யொட்டி தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தினந்தோறும் பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.


மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை யொட்டி விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த முகாமில், மனதை அமைதிபடுத்தும் முறை, சுவாச பயிற்சி, கை, கால் அசைவுகள் உட்பட பல யோகா சார்ந்த பயிற்சிகளை ஈஷா யோகா பயிற்சியாளர் ஆனந்தமூர்த்தி வழங்கினார். இதில் 200 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பை சி.இ.ஓ., மார்ஸ் தலைமையில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலன், மாவட்ட உற்கல்வி ஆய்வாளர் பத்மநாபன் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.