அனைத்து கல்லுாரிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஜூன் 21ல், யோகா பயிற்சி காட்சி நடத்த, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பிரதமர் மோடி ஐ.நா., சபை சென்றபோது, 'ஜூன் 21ம் தேதியை, யோகா தினமாக அறிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். இதையொட்டி, ஜூன் 21ம் தேதி யோகாதினமாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக பரிந்துரையின் பேரில்,'அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காலையில், யோகா பயிற்சி காட்சி நடத்த வேண்டும். மாணவர்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வு போட்டிகள் வைத்து, பரிசுவழங்க வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.