Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 15, 2015

    2000 ரூபாய் வரை பின்கோடு தேவை இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு


    கிரெடிட், டெபிட் கார்டுகளின் மூலம் பொருட்கள் வாங்கும் போது பின் கோடு உபயோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடந்த வருடம் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.


    அதன்படி சிறிய தொகை என்றாலும் கார்டு உபயோகப்படுத்தும் போது நமது பின் கோடினை உபயோகிக்க வேண்டி இருந்தது.

    இப்போது 2,000 ரூபாய்க்கு குறைவான தொகைக்கு கார்டு உபயோகித்தால் பின் கோடு தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட எல்லைக்குள் உபயோகிக்கப்படும் Contact less கார்டுகளை சில வங்கிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன. ஏனைய வங்கிகளும் அதனை அறிமுகப்படுத்தவுள்ளன.

    இந்த வகை கார்டுகளை பணம் செலுத்தும் இயந்திரத்தில் தேய்க்கத் தேவை இல்லை. வாடிக்கையாளரே கையில் வைத்தபடி அந்த இயந்திரத்தின் அருகில் கொண்டு சென்றாலே போதும் என்பது தான் அதன் சிறப்பம்சம்.

    அதே சமயத்தில் ஒரே நாளில் எத்தனை முறை அந்த மாதிரியான சிறிய அளவிலான பரிமாற்றங்கள் நடத்தப்படுகின்றன என்பதில் கவனமாக இருக்கவும் வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்குப் பதிலாக கார்டு உபயோகப்படுத்தும் போது மொபைலில் அதற்குரிய தகவலை உடனடியாக அனுப்புவது உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது.

    பின்கோடு உபயோகிக்காமல் கார்டினை உபயோகிப்பதற்கான புதிய லோகோ (“Contact less payment”) இருக்கும் இடங்களில் மேற்படி பின் கோடு உபயோகிக்காமல் 2,000 ரூபாய் வரை பயன்படுத்தலாம்.

    2,000 ரூபாய்க்கு


     குறைவான தொகைக்கு கார்டு உபயோகிக்கும் போது குறிப்பிட்ட வாடிக்கையாளர் இப்போது நடைமுறையில் உள்ளது போல பின் கோடு உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் அவருக்கு அந்த வசதியினைத் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பின்குறிப்பு : ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் போது பின் கோடு தேவையே!

    No comments: