Pages

Saturday, April 4, 2015

பாட புத்தகங்கள் விலை கடும் உயர்வு

தமிழகத்தில், பாடப் புத்தகங்களின் விலையை அரசு உயத்தியுள்ளது. வரும் கல்வியாண்டுக்காக, 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இதில், அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 3.17 கோடி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

தனியார் பள்ளி மாணவர்களுக்காக, 1.35 கோடி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. பாடப் புத்தகங்களின் விலை, கடந்த ஆண்டை விட, 25 சதவீதம் முதல், 250 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.சபீதா பிறப்பித்த உத்தரவு:
புத்தகங்களை அச்சிடுவதற்கான காகித விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தனியார் பள்ளிகளுக்கு விற்கப்படும் பாடப்புத்தகங்கள் விலையை உயர்த்த, தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் வேண்டு கோள் விடுத்துள்ளார். அவரது பரிந்துரையை ஏற்று, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு, பிளஸ் 2:
பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை, தமிழ், 110, ஆங்கிலம், 90, கணக்கு, 160, அறிவியல், 170, சமூக அறிவியல், ?30 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்று மடங்கு:
பிளஸ் 2 வகுப்புக்கான பாடப் புத்தங்கள் விலை, கடந்த ஆண்டை விட, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 விலங்கியல் பாடப்புத்தகம், 17 ரூபாயில் இருந்து, 80 ரூபாயாகவும், அரசியல் அறிவியல், 15 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாகவும், மனை அறிவியல், 20 ரூபாயில் இருந்து, 80 ரூபாயாகவும், வணிகவியல், 16 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.