Pages

Wednesday, April 15, 2015

சிவகங்கை மாவட்ட கல்விச் செய்திகள்

வ.சூரக்குடி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். டி.எஸ்.பி.முத்தமிழ் பள்ளி மலரை வெளியிட்டார்.


* திருப்புத்தூர்: மா.ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஏ.இ.இ.ஓ., மதிவாணன் தலைமை வகித்தார். ஆசிரியை முத்துலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் சான்றிதழ் வழங்கினார்.

* சிவகங்கை: கூட்டுறவுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சேவியர் தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் தான்யலட்சுமி பரிசு வழங்கினார். ஆசிரியை விஜயா வரவேற்றார். தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார்.

* தேவகோட்டை: இளங்குடி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா உதவி தொடக்க கல்வி அலுவலர் பால்ராஜ் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியை செல்வி அறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி நடந்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.