போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையில், அரசு பள்ளி அருகே, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளின் நுழைவாயில்களில், காவல் துறை சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் கூறியதாவது:
சென்னையில், மாணவர்கள் கடத்தலை தடுக்கும் விதமாக, அனைத்து பள்ளிகளின் நுழைவாயில்களிலும், அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். பள்ளியின் முன்பு, யாரேனும் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தால் உடனே தொடர்பு கொள்ள, தொடர்பு எண்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன், ஆற்காடு சாலையில் உள்ள அரசு பள்ளியின் நுழைவாயிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை உபயோகமாக உள்ளதாக, பல பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.