Pages

Thursday, April 16, 2015

சத்துணவு ஊழியர் போராட்டம்: பாதிப்பில்லை; அமைச்சர்

''சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தால் பாதிப்பு இல்லை,'' என, அமைச்சர் வளர்மதி தெரிவித்தார். மதுரையில் சத்துணவு மையங்களை ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது: சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டது. இதில், 12 கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.

இதற்கிடையில், ஊழியர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்திலுள்ள அனைத்து மையங்களிலும் குழந்தைகளுக்கு வழக்கம் போல சத்துணவு வழங்கப்பட்டது. பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை பெறப்பட்டு, பின் முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.